2024 - டிசம்பர் மாதம் சிறார் திரைப்படம் திரையிடுதல் தொடர்பாக DSE செயல்முறைகள், கதைச் சுருக்கம்,DOWNLOAD LINK,POSTER PICTURE!!! ALL IN ONE LINK..
2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6-9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணறும் வகையில்,ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய பண்புநலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் ஆகியன இச்சிறார் திரைப்படம் திரையிடுதலின் நோக்கமாக அமைகிறது.
ஒரு திரைப்படத்தை வெறுமனே நகரும் பிரேம்களாக பார்ப்பதை விட, உலக சினிமா பற்றி குழந்தைகளுக்கு ஒரு பரந்த கருத்தை வழங்குவது. பள்ளிகளில் மாணவர்களின் கல்வியை வேறுபட்ட முறையில் அணுகுதல், கலை, கலாசாரம் மற்றும் திரைப்படங்களை ஒருங்கிணைத்து பிள்ளைகளின் கற்பனைத்திறன், படைப்பாற்றலை வளர்த்தல், மேலும், இத்திரைபடங்களை கண்ணுறும் மாணவர்களின் விரிசிந்தனை மேம்படுதல் மற்றும் விமர்சிக்கும் திறன் உள்ளிட்ட பண்புகள் பெற இந்நிகழ்வு தூண்டுகோலாக அமைகிறது.
💥💥திரைப்பட விவரம்
💥💥DSE செயல்முறைகள்👇👇👇
கதை சுருக்கம்:
1.பெனோ
பிறக்கும் போது சந்தோஷமாக பிறந்தார். அவரது பெற்றோருக்கு அவளது கண்களில் ஒளியில்லை என உணர்ந்த பிறகு துயரத்தில் விழுந்தது குடும்பம்,இருந்தாலும் மருத்துவம் கை விரித்தாலும், அவளின் அறிவு பள்ளிப்படிப்பு தொடங்கி கல்லூரி படிப்பு வரை எதிலும் முதலாய் முன்னேற வைத்தது. மகளின் அறிவு பெற்றோரை மகிழ்ச்சி கடலில் நீந்த வைத்தது.அவளது கல்லூரி அவளின் கனவுகளுக்கு விதையாய் இருந்தது, ஒளியில்லாத விழி அதற்கு வழி தந்த பிரையில் வழி கல்வி, பெனோவின் கனவு அரசின் குடிமை தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே,அது அவளுக்கு சாத்தியமா என்பது கேள்விக்குறி, காரணம் தேர்வுக்கான புத்தகம் விழி இழந்தோர் படிக்கின்ற பிரையில் வழியில் இல்லை. சர்வதேச நாடுகளில் பங்குபெற்ற ஒரு நிகழ்வில் வசந்தம் போல் முதன்மையானவள் முதல் குடிமை தேர்வில் 20 மதிப்பெண்களில்
தோற்றவள் அடுத்த குடிமை தேர்வில் 1122 பேர் எழுதினார்கள் அதில் பெனோ 343 வது நபராக வந்து இந்திய ஆட்சி பணிக்கு பெருமை சேர்க்க நின்றாள் அதையும் தன் தொழில் நுட்ப அறிவால் வென்று காட்டினாள். இப்பொழுது இந்திய அரசின் வெளி உறவு துறை அதிகாரி.பெற்றோர்கள் ஆனந்தத்தில்.'ஊனம் தடையில்லை
ஊன்றுகோலாய் அறிவுத் துணை இருந்தால்' என்பது தான் பெனோ நமக்கு சொல்லும் பாடம்.
0 Comments