Showing posts with label சுதந்திர தினம். Show all posts
Showing posts with label சுதந்திர தினம். Show all posts

Sunday, 10 August 2025

சுதந்திர தின கவிதைகள்-2025




சுதந்திர தின கவிதைகள்

கவிதை 1

அன்பு குழந்தைகளே, 

 துணிவு, தியாகம் இரண்டையும், 

 மூவர்ண கொடியில் கண்டோம்.

 அமிர்தப் பெருவிழா கொண்டாடியபின், 

 இந்த 79-வது ஆண்டில், 

 புதிய இந்தியாவைக் கண்டோம்.

 சாதிகள் இல்லை, 

 வேற்றுமைகள் இல்லை,

 இவையெல்லாம் கடந்து,

 ஒன்றுபட்ட இந்தியாவை கண்டோம்.

 தேசிய கீதம் பாடி, 

 தேசியக் கொடியை ஏற்றி,

 நாட்டுப் பற்றை வளர்ப்போம்.

 நம் நாட்டின் வளர்ச்சியைக் கண்டு,

 உலகமே வியக்கட்டும். 

 சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!


 கவிதை-2

         சுதந்திரத்தின் சூரியன்

அடிமை விலங்கு உடைத்தெறிய,

அகிலம் வியக்க விடுதலை பெற,

அரும்பெரும் தியாகங்கள் பல,

ஆயிரமாயிரம் உயிர்களின் விலை!


பகத்சிங், நேதாஜி, காந்தியின் கனவு,

பூத்த இந்த சுதந்திரப் பெருநாள்,

பாட்டன் பூட்டன் கண்ட புது உறவு,

பாரத மண்ணின் புதிய விடியல்!


முழங்கும் மூவர்ணக் கொடி,

முன்னோர் கண்ட வெற்றிப் படி.

சாதிகள் இல்லை, மதங்கள் இல்லை,

சமத்துவமே நம் தேசத்தின் எல்லை.


விழித்தெழுவோம் பாரதத்தின் மைந்தரே!

விடியலின் ஒளியாய் நாம் எழவே!

இளைஞர் படை முன்வர வேண்டும்,

இந்தியா இன்னும் உயர வேண்டும்!


சுதந்திரத்தின் சூரியன் ஒளிர்ந்தது,

தேசத்தின் எதிர்காலம் மலர்ந்தது,

ஜெய் ஹிந்த்! ஜெய் ஹிந்த்!

பாரத தேசம் வாழ்க வாழ்க!

 

கவிதை 3

புதிய அத்தியாயம்

1947 - ஒரு விடியல்,

இருண்ட வானில் உதித்த சூரியன்.

மௌனமாய் மூழ்கிய கனவுகளுக்கு,

ஒளியாய் வந்த சுதந்திரம்!


அன்னை பாரதத்தின் அடிமைச் சங்கிலியை,

அறுத்தெறிந்து எழுந்த பெருநாள்.

தியாகச் சுடர்கள் எரிந்து,

விடுதலைக் காற்று வீசிய இனிய திருநாள்.


பகத்சிங் தூக்கு மேடையில் சொன்ன "இன்குலாப் ஜிந்தாபாத்!"

காந்தியின் அகிம்சைப் போர் கண்ட வெற்றி.

நேதாஜியின் 'டெல்லி சலோ' முழக்கம்,

முழுமையாய் பலித்த வீரத்தின் சாட்சி.


இந்தியன் என்ற உணர்வுடன்,

இமயத்தின் பெருமையுடன்,

ஒற்றுமையாய் நாம் நின்றோம் அன்றே,

உயர்ந்த கொடியின் நிழலிலே.


சுதந்திரம் என்பது வெறும் வார்த்தையல்ல,

அது நம் ஒவ்வொருவரின் உயிர் மூச்சு.

1947-ல் கிடைத்த இந்த வரம்,

என்றும் நம் இதயத்தில் வாழும் பாரதம்.


ஜெய் ஹிந்த்!

பாரத தேசம் வாழ்க!


   

கவிதை 4

கொடி பறக்குது விண்ணிலே, 

சின்னஞ்சிறு பிள்ளைகள் நாங்கள். 

நாட்டின் பெருமை நாங்கள், 

தேசத்தின் எதிர்காலம் நாங்கள்.


 

கவிதை 5

அண்ணல் காந்தி வந்தார்,

நேருவும் உடன் வந்தார். 

விடுதலையை பெற்றுத் தந்தார், 

வளர்ந்த நாடு நம் நாடானது.



 

கவிதை 6

சாதிகள் இல்லை 

சமயங்கள் இல்லை, 

இந்தியன் என்ற உணர்வே உண்மை!

முன்னோர்கள் தந்த சுதந்திரம்,

முழுமையாய் நாம் காப்போம் தினமும்! 

சுதந்திர தின வாழ்த்துக்கள், 

நம் தேசத்திற்கு என்றும் வெற்றி உண்டாகட்டும்!


கவிதை 7

அணிவகுப்போம்! சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்!

தியாக சீலர்களை நினைத்து மகிழ்வோம்!

இந்தியாவை தலைநிமிர்த்துவோம்,

இளைஞர் சக்தியாய் நாம் எழுவோம்!

சுதந்திர பாரதம் வாழ்க!

ஜெய் ஹிந்த்!


கவிதை 8

விடுதலை கண்ட நாள் இது,

மகிழ்ச்சி பொங்கும் திருநாள் அது!

மகாத்மாவின் வழியைப் பின்பற்றி,

அமைதியைப் போற்றுவோம் எப்போதும்!

சிறுவர் முதல் பெரியோர் வரை,

ஒற்றுமையாய் நாம் வாழ்வோம் சிறக்கவே! 


 கவிதை 9

பறக்குது பார் மூவர்ணக் கொடி,

பாரதத்தின் பெருமை இடி!

வீரர்களின் தியாகம் இது,

நம் தேசத்தின் சுதந்திரம் அது!

மாணவர்களே நாம் சபதம் ஏற்போம்,

தேசத்தைப் போற்றி நாம் உயர்வோம்!

 

POPULAR POSTS

8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide

MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...