National Means-cum-merit Scholarship Scheme NMMS என்பது தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு, ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசியவருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்படுகிறது. CCEA வின் ஒப்புதலைப் பெற்ற பிறகு 2008 ஆம் ஆண்டு மத்தியத் துறைத் திட்டமான தேசிய வருவாய் மற்றும் திறனறி தேர்வுத் திட்டம் ( 'National Means-cum-merit Scholarship Scheme') தொடங்கப்பட்டது. பொருளாதாரத்தில் நலிவடைந்த திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், இடைநிற்றலைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடத்தப்படுகிறது. இ த்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1,000 வீதம், 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரத்தை அரசு வழங்குகிறது. தேர்ச்சி பெறும் மாணவர்கள் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள...