8ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் NMMS (தேசிய வருவாய் மற்றும் திறனறி தேர்வு) தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள PDF மற்றும் VIDEOக்களின் தொகுப்பு.
NMMS தேர்வு பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
மனத்திறன் தேர்வு பற்றியும் அதில் கேட்க்கப்படும் கேள்விகள் பற்றியும் மாணவர்கள் எளிதாக அறிந்து கொள்ள உதவும் PDF AND VIDEOS.(FREE DOWNLOAD)
✅✅TO DOWNLOAD THIS NMMS EXAM DETAILS FREE PDF CLICK HERE
✅✅TO DOWNLOAD THIS NMMS MAT EXAM எண்ணியல் திறன் FREE PDF CLICK HERE
✅✅TO DOWNLOAD THIS NMMS MAT EXAM எண்ணியல் திறன்-2 FREE PDF
NMMS என்பது தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு, ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசியவருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்படுகிறது.
CCEA வின் ஒப்புதலைப் பெற்ற பிறகு 2008 ஆம் ஆண்டு மத்தியத் துறைத் திட்டமான தேசிய வருவாய் மற்றும் திறனறி தேர்வுத் திட்டம் ( 'National Means-cum-merit Scholarship Scheme') தொடங்கப்பட்டது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், இடைநிற்றலைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1,000 வீதம், 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரத்தை அரசு வழங்குகிறது. தேர்ச்சி பெறும் மாணவர்கள் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தால் மட்டுமே ஊக்கத்தொகை கிடைக்கும்.உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஏப்ரல் 1, 2017 முதல் ஆண்டுக்கு 12000/-உதவித்தொகையாக வழங்கப்படுகிறது (முன்பு இது ஆண்டுக்கு ரூ. 6000/- ஆக இருந்தது).
2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை மொத்தமாக ரூ.1827 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டத்தைத் தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தகுதி வரம்பு:
அனைத்து ஆதாரங்களில் இருந்தும் பெற்றோரின் வருமானம் . ஆண்டுக்கு ரூ 3,50,000/- க்கு மேல் இல்லாத மாணவர்கள் உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள்.
ஸ்காலர்ஷிப் வழங்குவதற்கான தேர்வில் கலந்துகொள்வதற்கு மாணவர்கள் ஏழாம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான கிரேடு பெற்றிருக்க வேண்டும் (SC/ST மாணவர்களுக்கு 5% தளர்வு உண்டு).
மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் வழக்கமான மாணவராகப் படிக்க வேண்டும்.
என்விஎஸ், கேவிஎஸ் மற்றும் குடியிருப்புப் பள்ளிகளின் மாணவர்கள் உதவித்தொகைக்கு தகுதியற்றவர்கள்.
மாநில அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு உண்டு.
தேர்வு முறை:
மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒவ்வொரு மாநிலமும்/யூனியன் பிரதேசமும் அதன் சொந்த தேர்வை நடத்துகிறது.
8ம் வகுப்பை அடிப்படையாகக் கொண்டு இத் தேர்வு நடத்தப்படுகிறது
NMMS தேர்வின் கீழ் மன திறன் தேர்வு (MAT) மற்றும் படிப்பறிவுத் திறன் தேர்வு Scholastic Aptitude Test (SAT) ஆகிய இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
தகுதியை பூர்த்தி செய்யும் மாணவர்கள், இந்த இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து எடுக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள்.
SC/ST மாணவர்களுக்கு, இந்த கட் ஆஃப் 32% மதிப்பெண்கள்.
அடுத்த உயர் வகுப்புகளில் ஸ்காலர்ஷிப் (SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5% தளர்வு) தொடர பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் உதவித்தொகையைத் தொடர, விருது பெற்றவர்கள் முதல் முயற்சியிலேயே பொது தேர்வுகளில் வெற்றி பெறுதல் வேண்டும்.