நவம்பர்-15, 16-ல் ‘டெட்’(TET) தகுதித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் திடீர் அறிவிப்பு...
நவ.15, 16-ல் ‘டெட்’ தகுதித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் திடீர் அறிவிப்பு சென்னை: இந்த ஆண்டுக்கான ‘டெட்’ தகுதித் தேர்வு நவம்பர் 15 மற்றும் 16-ம் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை திடீரென அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் உடனடியாக தொடங்கியது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றக் கூடிய ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இடைநிலை ஆசிரியர்களுக்கு டெட் தாள் -1-ம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் தாள்-2-ம் நடத்தப்படுகின்றன. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) விதிமுறையின்படி ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கடைசியாக 2022-ம் டெட் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டு காலமாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை. ...