Sunday, 15 October 2023

தன்னம்பிக்கை கதை-8 சிங்க ராஜா


ஒரு காட்டில சிங்கம் இருந்துச்சு. அது ஏப்பம் விட்டுச்சு. பக்கத்தில இருந்த யானை. "பேட் ஸ்மல்(கெட்ட நாற்றம்)" என்று சொல்லி முகம் சுளித்தது. சிங்கத்திற்கு கோபம் வந்து "நான் ராஜா நான் ஏப்பம் விடும் போது வாய் நாற்றம் அடிக்கிறது என்று முகம் சுளிக்கிறாய்? யூ ஆர் டிஸ்மிஸ்"என்று யானையை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது.

அடுத்ததாக கரடியிடம் சிங்கம் கேட்டது. "என் வாய் நாற்றம் அடிக்கிறதா என்று? அதற்கு கரடி ராஜா "உங்கள் வாயிலிருந்து ஏலக்காய், கிராம்பு, சந்தனம், ஜவ்வாது என்று விதவிதமாக வாசமாக இருக்கிறது" என்று சொன்னது. அதற்கு சிங்கம் "எப்போதும் மாமிசமே சாப்பிடுகிற என் வாய் எப்படி நறுமணத்துடன் இருக்க முடியும? நீ ஜால்ரா அடித்து பொய் சொல்கிறாய்? யூ ஆர் டிஸ்மிஸ்" கரடியையும் பதவி நீக்கம் செய்தது.

இப்போது சிங்கம் மனம் பொறுக்க முடியாமல் நரியிடம் கேட்டது அதே கேள்வியை. அதற்கு நரி சொன்னது" ராஜா நான்கு நாட்களாக எனக்கு ஜலதோஷம். எனக்கு ஒன்றுமே தெரியவில்லை" என்றது. "யு கன்டின்யூ" என்று நரியின் பதவியை நீடித்தது.

கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்வது.

முதலாளிலாகளிடமோ, பணக்காரர்களிடமோ, தான் தான் அறிவாளி என்பவர்களிடமோ, பட்டும் படாமலும், விட்டு விலகாமலும், பக்குவமாக நாம் பேசவேண்டும்!!😃😃😃

No comments:

Post a Comment

POPULAR POSTS

8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide

MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...