சார்லி சாப்ளினின் எல்லா படைப்புகளுமே சிறந்தவையாக மதிப்பிடப்பட்டாலும் அவரது குறிப்பிட்ட சில படங்கள் தனிச்சிறப்பு கொண்டவை. அதில் ஒரு படமான ‘மாடர்ன் டைம்ஸ்’ வெளியான நாள் இன்று. 1936-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், சினிமாவில் எத்தனையோ நவீனங்களைப் பார்த்துப் பழகிவிட்ட பார்வையாளர்களுக்கு இன்னும் அலுக்காத நகைச்சுவைக் காவியமாக இன்றும் திகழ்கிறது.
பெரும் பொருளியல் வீழ்ச்சி நடந்த காலகட்டத்தில் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் தொழிலாளிக்கு ஏற்படும் அனுபவங்களே இந்தப் படம். நவீன சாதனங்களின் வேகத்துக்கு ஈடு கொடுத்து வேலை செய்ய முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகும் அந்தத் தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். குணமாகி வெளியே வரும் அவனை, கம்யூனிஸ்ட் போராட்டக்காரன் என்று நினைத்துக் கைது செய்கின்றனர். விடுதலையான பின், பசிக்காக ரொட்டித் துண்டைத் திருடிக் கொண்டு ஓடி வரும் ஒரு இளம் பெண்ணின் மீது காதல் கொள்கிறான். இவர்கள் இருவரும் போலீஸிடமிருந்து தப்பித்து தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயல்கின்றனர். கடைசியில் இவர்கள் தப்பிப்பதே இந்தப் படம்.
சிறார் திரைப்படம் (MODERN TIMES) - பள்ளிகளில் திரையிடப்பட வேண்டிய திரைப்படம். CLICK HERE TO DOWNLOAD👇👇👇
சிசிடிவி கேமரா எனும் கண்காணிப்பு கேமரா இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனியில் ராணுவ காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கும் முன்பே, ‘மாடர்ன் டைம்ஸ்’ திரைப்படத்தில் ஒரு விநோதமான சிசிடிவி கேமரா காட்டப்பட்டிருக்கும். திரையுடன் கூடிய சிசிடிவி கேமரா அது. அதன் மூலம் தொழிலாளர்களை முதலாளி கண்காணிப்பது மட்டுமல்லாமல் சற்றே ஓய்வறையில் புகை பிடிக்கப் போகும் சாப்ளின் முன்னால் திரையில் தோன்றி, வேலையைப் பார் என்று அதட்டுவார். இன்று அலுவலக சிசிடிவி கேமராவுக்குப் பயந்தே வேலை செய்யும் பணியாளர்களின் நிலையை அன்றே சித்திரிக்கும் காட்சி இது.
).png)
.jpg)
0 Comments