Friday, 22 November 2024

மகிழ் முற்றம் (HOUSE SYSTEM) DSE செயல்முறைகள் மற்றும் ஆசிரியர் கையேடு(HOUSE SYSTEM HANDBOOK)



மகிழ் முற்றம் (HOUSE SYSTEM) DSE செயல்முறைகள் மற்றும் ஆசிரியர் கையேடு (HOUSE SYSTEM HANDBOOK)


 

மகிழ் முற்றம் ஆசிரியர் கையேடு(HOUSE SYSTEM HANDBOOK)



"மகிழ் முற்றம்" மாணவர் குழுக்கள் என்றால் என்ன? அதில் ஆசிரியர்கள் & மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?


அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாக ரூ.2 கோடியில் ‘மகிழ் முற்றம்’ என்ற திட்டத்தின் கீழ் மாணவர் குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து மாணவர் தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர். 
இதன்மூலம் மாணவர்களிடம் அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பட மாதிரி சட்டப்பேரவை, நாடாளுமன்றம் நடத்தப்படும். இதற்காக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். இந்தத் திட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதை செயல்படுத்தும் விதமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் குழு அமைப்பினை ‘மகிழ் முற்றம்’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவு ஆகியவை இந்த அமைப்பின் நோக்கமாகும். 
மகிழ் முற்றம் மாணவர் குழு கட்டமைப்பின்
கீழ் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் குறிஞ்சி, முல்லை உட்பட 5 குழுக்களாக பிரிக்கப்படுவர். இக்குழு அமைப்பில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இடம்பெறுவர். ஒவ்வொரு வகுப்பிலும் பயிலும் மாணவர்கள் இந்த குழுக்களில் சேர்க்கப்பட்டு அதன் விவரம் எமிஸ் தளத்தின் மூலமாக கண்காணிக்கப்படும்.
இதுதவிர பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியர் மகிழ் முற்றம் என்ற மாணவர் குழு அமைப்புக்கான பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட வேண்டும். மற்ற ஆசிரியர்களுக்கு குலுக்கல் முறையில் குழுவானது ஒதுக்கப்படும். ஒவ்வொரு குழுவுக்கும் உயர்வகுப்பில் பயிலும் மாணவர்களில் இருவர் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும். 
அதேபோல், வகுப்பு வாரியாகவும் அந்தக் குழுவின் மாணவர் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கான மாணவர் தலைவர்கள், வகுப்பு தலைவர்கள், தலைமை பொறுப்பு ஆசிரியர், குழுவுக்கான பொறுப்பு ஆசிரியர்கள் ஆகியோரின் பதவி ஏற்பு விழா அனைத்து பள்ளிகளிலும் நவமபர் 14-ம் தேதி நடைபெறுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
அந்த நிகழ்வின் படங்கள், காணொலியை எமிஸ் தளத்தில் நவம்பர் 19-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த குழுக்களின் செயல்பாடுகள் மாதந்தோறும் மதிப்பீடு செய்யப்பட்டு புள்ளிகள் கணக்கிடப்படும். 
அதிக புள்ளிகளைப் பெறும் குழுவானது அந்த மாதத்தின் வெற்றிக் குழுவாக அறிவிக்கப்பட்டு அதன் வண்ணக்கொடி பள்ளியில் அனைவரின் பார்வைக்கும் எதிர்வரும் மாதம் முழுவதும் காட்சிப்படுத்த வேண்டும். இதுகுறித்த தகவல்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 14 November 2024

2024 நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) திரையிடுதல்- Download link,கதைச்சுருக்கம்,தொடர்பாக DSE செயல்முறைகள்!!!November 2024 Movie.



நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) திரையிடுதல் தொடர்பாக DSE செயல்முறைகள்!!!


2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6-9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணறும் வகையில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய பண்புநலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் ஆகியன இச்சிறார் திரைப்படம் திரையிடுதலின் முக்கியமான நோக்கமாக அமைகிறது.

திரைப்பட மன்றம் (மூவி கிளப்) நோக்கங்கள்:

  • திரைப்படங்களை புரிந்துகொள்ளுதல், பல்வேறு வகைகள் மற்றும் கருப்பொருள்களுக்கு இடையில் வேறுபடுதல்,ஊடக கல்வியறிவு மற்றும் விமர்சன சிந்தனையை வளர்த்தல்,விமர்சன ரீதியாக  திரைப்பட நுட்பங்களைப் பகுப்பாய்வு செய்தல்,யோசனைகள் மற்றும் முன்னோக்குகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குதல்.
  • கேமராக்கள், எடிட்டிங் மென்பொருள், லைட்டிங் மற்றும் ஒலி போன்ற திரைப்படத் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குதல் மற்றும் இது சார்ந்த தொழில் ஆர்வத்தை ஊக்குவித்தல்.
  • சினிமா துறையில் கதை எழுதுதல், திரைக்கதை, இயக்கம், எடிட்டிங், இசை போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடும் நபர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.
  • திரைப்படக் கலையில் ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்க செய்தல்.
  • மாணவர்கள் தங்கள் எண்ணங்கள்,திரைப்பட விமர்சனங்கள், திரைக்கதை எழுதுதல், நடிப்பு அல்லது திரைப்படத் தயாரிப்பு மூலம் மற்றும் முன்னோக்குகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குதல்.
  • கேமராக்கள், எடிட்டிங் மென்பொருள், லைட்டிங் மற்றும் ஒலி போன்ற திரைப்படத் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குதல் மற்றும் இது சார்ந்த தொழில் ஆர்வத்தை ஊக்குவித்தல்.
  • சினிமா துறையில் கதை எழுதுதல், திரைக்கதை, இயக்கம், எடிட்டிங், இசை போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடும் நபர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.
  • திரைப்படக் கலையில் ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்க செய்தல்.


ஒவ்வொரு மாதமும், இரண்டாவது வாராத்தில் சிறார் திரைப்படம் திரையிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் திரையிடப்படவுள்ள திரைப்படம் முன்கூட்டியே மாதத்தின் முதல் வாராத்தில் EMIS வழியே தலைமையாசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த ஆண்டின் முதல் சிறார் திரைப்படமானது கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் தயாரித்த "டாப் 10" என்ற தலைப்பில், குழந்தைகள் தினத்தையொட்டி நவம்பர் - 2024 ஆம் மாதத்தில் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் மனநலத்தினை செறிவூட்டுவதற்காக 14416 சிறப்பு எண் வசதியினை ஆசிரியர்கள் மற்றம் கழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு குறும்படமும் திரையிடப்பட உள்ளது. 


கதை சுருக்கம்-டாப் 10

இயக்கம்: 6-9 வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்கள்
வெளியான ஆண்டு: ஏப்ரல் 2024
மொழி: தமிழ்
திரைப்படத்தின் காலம்: 45 நிமிடங்கள்
உங்கள் கண்களுக்கு காட்சியாக போகும் இந்த சிறார் திரைப்படங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் (Anna Cenanary Library) உருவாக்கப்பட்டது ஆகும்.
இந்தத் திரைப்படங்கள் மாணவர்களின் பன்முகத்தன்மையை இனம் கண்டு, ஒரு திரைப்படத்தை எப்படி பார்க்க வேண்டும், எப்படி புரிந்து கொள்ள வேண்டும், ஒரு திரைப்படத்தின் திரைக்கதை என்பது என்ன? படத்தொகுப்பு என்பது என்ன? இயக்கம் என்பது என்ன? நடிப்பு என்பது என்ன? காட்சி அமைப்பு என்பது என்ன? என்பதெல்லாம் பல்வேறு ஆளுமைகளால் மூன்று நாள் பயிற்சி வகுப்பாக சொல்லித் தரப்பட்டு அதன் பின் சிறார்கள் தங்களுடைய பார்வையில் கதைகள் உருவாக்கி எடுக்கப்பட்டவை ஆகும். அந்தக் கதைகளை சின்னஞ்சிறு கற்பனை கூட்டுக்குள் நட்பு என்றால் என்ன? நூலகம் என்ன செய்யும்- புத்தகம் எல்லாவற்றையும் விட உயரமானது, ஊனம்ஒரு தடை அல்ல, இயற்கையை நேசிப்போம், படித்தால் தான் உயர முடியும், ஒவ்வொருவரின் உழைப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டும்: என்று பறந்து விரிந்த பார்வையில் பண்பாட்டின் கலாச்சார கூறுகளை புரிந்து கொண்டவர்களாக மழலைகள் ஒரே நாளில் யோசித்து இயக்கி படத்தொகுப்பு செய்து இனிமையான இசை கோர்ப்போடு தந்தவைதான் இந்த படைப்புகள்.
இவை அனைத்தும் திரைத்துறையைச் சேர்ந்த இயக்குனர்கள் சிறந்த பட தொகுப்பாளர் இவர்கள் முன்னால் திரையிடப்பட்டு, சிறந்த நடிகர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த இயக்குனர், சிறந்த இசை கோர்ப்பு என்று பல்வேறு விதமான விருதுகள் வழங்கப்பட்டு மழலைகளின் எண்ணம் திரை வானில் மின்னும் நட்சத்திரங்களாக நாளை உலா வர அவர்களுக்கு இந்தத் திரை மொழி பகிரப்பட்டு இன்றைக்கு உணர்வும் அறிவும் கலந்த உன்னதமாக உங்கள் பார்வைக்கு வருகிறது.

நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) movie link

👇👇👇
https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard






Tuesday, 12 November 2024

DEPARTMENTAL EXAM 2024 டிசம்பர் - 2024 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை, விதிமுறைகள், பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணை வெளியீடு!!!

டிசம்பர் - 2024 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை, விதிமுறைகள், பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணை வெளியீடு!!! 

பதவியும் எழுத வேண்டிய துறைத்தேர்வுகளும்...


கால அட்டவணை:


பதவியும் எழுத வேண்டிய துறைத்தேர்வுகளும்... 



Monday, 4 November 2024

வானவில் மன்ற கணித வீடியோக்கள் தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியீட்டுள்ள வீடியோக்கள் PART-2


வானவில் மன்ற  கணித வீடியோக்கள்
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியீட்டுள்ள  வீடியோக்கள்

6. காதித துவாரத்தில் கணித வடிவங்கள்



7.காகித பாகைமாணி




8.கால(ஆ)ணி மணி சட்டம்


9.சதுரங்களிலிருந்து  நான்முகி




10.செவ்வக காகிதப் பெட்டி

*வானவில் மன்ற கணித வீடியோக்கள்*தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியீட்டுள்ள வீடியோக்கள்

வானவில் மன்ற  கணித வீடியோக்கள்
தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியீட்டுள்ள  வீடியோக்கள்

1. CD பாகைமாணி



2. உருளையும் கூம்பும்


3.எளிய இயந்திர மாதிரி




4.ஒழுங்கற்ற காகிதத்தில் அழகிய செவ்வகம்




5.கடிகாரப் புதிர்




இந்திய ராணுவத்தைப் பற்றிய ஏழு சுவாரஸ்யமான தகவல்கள்



இந்திய ராணுவத்தைப் பற்றிய ஏழு சுவாரஸ்யமான தகவல்கள்

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அற்புதமான இந்திய இராணுவ உண்மைகள் இங்கே.

  • 1.2 மில்லியனுக்கும் அதிகமான சுறுசுறுப்பான துருப்புக்கள் மற்றும் 0.9 மில்லியன் ரிசர்வ் துருப்புக்களைக் கொண்ட இந்திய இராணுவம் உலகின் மிகப்பெரிய-நிலையான அனைத்து தன்னார்வ இராணுவமாகும்.

  • முதல் உலகப் போரில் 1.3 மில்லியன் இந்திய வீரர்கள் நேச நாடுகளுடன் இணைந்து போரிட்டனர். 74,000 துருப்புக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயினர். டெல்லியில் உள்ள இந்தியா கேட் நினைவகம் இந்த போரின் போது உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

  • 2022 ஆம் ஆண்டில், உலகளாவிய ஃபயர்பவர் இன்டெக்ஸ், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு, இந்திய இராணுவத்தை உலகளவில் நான்காவது வலிமைமிக்க இராணுவமாக மதிப்பிட்டது. இராணுவ வலிமை, நிதிநிலை, தளவாடத் திறன் மற்றும் புவியியல் போன்ற அளவுருக்களின் அடிப்படையில் தரவரிசை தீர்மானிக்கப்பட்டது.

  • உலகின் மிக உயரமான பாலமான லடாக்கில் உள்ள பெய்லி பாலம் 1982 இல் இந்திய ராணுவத்தால் கட்டப்பட்டது. இந்த பாலம் சராசரி கடல் மட்டத்திலிருந்து 18,739 அடி (5602 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் 98 அடி (30 மீட்டர்) நீளம் கொண்டது.

  • 2013 ஆம் ஆண்டு வட இந்திய வெள்ளத்தின் போது மிகப் பெரிய பொதுமக்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையான ஆபரேஷன் ரஹாட்டின் ஒரு பகுதியாக இந்திய இராணுவம் இருந்தது. இந்திய விமானப்படை (IAF) உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் சிக்கித் தவித்த 19,600 க்கும் மேற்பட்டவர்களை விமானத்தில் ஏற்றியபோது, ​​​​இந்திய இராணுவம் சாலை மற்றும் இராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் 10,500 க்கும் மேற்பட்டவர்களை மீட்டது.

  • உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறையை இந்திய ராணுவம் கட்டுப்படுத்துகிறது. பனிப்பாறை உலகின் துருவமற்ற பகுதிகளில் இரண்டாவது மிக நீளமானது. இது 18,875 அடி (5753 மீட்டர்) உயரத்தில் உள்ளது. 2004 ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு ஆதரவாக மாதம் ஒன்றுக்கு சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா செலவிட்டது.

  • 61 வது குதிரைப்படை படைப்பிரிவு இந்திய இராணுவத்தின் மிகப்பெரிய குதிரை ஏற்றப்பட்ட குதிரைப்படை பிரிவுகளில் ஒன்றாகும். இது உலகின் கடைசி செயல்பாட்டு மற்றும் இயந்திரமயமாக்கப்படாத குதிரை குதிரைப்படை பிரிவுகளில் ஒன்றாகும்.

Sunday, 3 November 2024

இந்திய ராணுவத்தின் 10 சிறந்த விலைமதிப்பற்ற பொன் மொழிகள்

 



இந்திய ராணுவத்தின் 10 சிறந்த விலைமதிப்பற்ற பொன் மொழிகள்👇

இதனை, 

ஒவ்வொரு இந்தியரும்... 

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்... 

என ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் கூறியுள்ளார்.


 1. 

  ′′உங்களுக்கு வாழ்நாளின் அசாதாரண சாகசம் என்னவோ...

   அதுவே,

   எங்களின் அன்றாட வாழ்க்கை′′

- லே-லடாக் நெடுஞ்சாலையில், இந்திய ராணுவம் வைத்துள்ள வாசகம். 


 2. 

′′காற்று வீசுவதால் எங்கள் கொடி பறக்கவில்லை...

தன் உயிரை தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரரின் இறுதி மூச்சுடன் 

பறக்கிறது"

- இந்திய ராணுவம்


 3. 

'′′நான் மூவர்ண கொடியை 'ஏந்தி' கொண்டு... 

அல்லது 

மூவர்ண கொடியைப் 'போர்த்தி' கொண்டு வருவேன்... 

கண்டிப்பாக வருவேன்"

- கேப்டன் விக்ரம் பத்ரா,

இறுதி வீர சக்கரம். 


 4. 

′′என் வீரத்தை நிரூபிக்கும் முன் என் மரணம் வந்தால்...

நான் மரணத்தைக் கொல்வேன்...  

என்று சத்தியம் செய்கிறேன்"

- கேப்டன் மனோஜ் குமார் பாண்டே,

பரம் வீர் சக்ரா, 

1/11 கோர்க்கா ரைபிள்ஸ்


5.

′′எங்களைப் பெற நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்...

எங்களைப் பிடிக்க நீங்கள் கூர்மையாக இருக்க வேண்டும்...

ஆனால்...

எங்களை வெல்ல நீங்கள் குழந்தையாக இருக்க வேண்டும்"

- இந்திய ராணுவம்


6.

′கடவுளே! எங்கள்  'எதிரி கள்' மீது கருணை காட்டுங்கள்...

ஏனென்றால்,

நாங்கள் அதனை அவர்களிடம் காட்ட மாட்டோம்"

- இந்திய ராணுவம்


7.

′′நம் வாழ்வு தற்செயல், 

நம் காதல் நம் விருப்பம், 

நாட்டை பாதுகாக்க கொலை 

செய்வது நம் தொழில்.

- அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை


8.

′′மரணத்திற்கு பயப்படவில்லை' என்று ஒருவர் கூறினால், அவர் ஒன்று 

பொய்யாக இருக்க வேண்டும்...

அல்லது...

அவர் இந்திய ராணுவத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்."

- பீல்ட் மார்ஷல் சாம் மானெக்க்ஷா


9.

′′பயங்கரவாதிகளை மன்னிப்பது கடவுளின் வேலை...

அதற்கு, அவர்களை கடவுளை சந்திக்க வைப்பது எங்கள் வேலை."

- இந்திய ராணுவம்


10.

′நம் நாட்டுக்கு கொடுக்க ஒரே ஒரு உயிர் மட்டுமே உள்ளதே' என்று 

வருந்துகிறோம்."

- இந்திய ராணுவம்


 ஜெய் ஹிந்த்!


POPULAR POSTS

8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide

MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...