Friday, 18 October 2024

செயற்கை நுண்ணறிவின் ஒரு படைப்பு... திருக்குறளில் இருந்து விடை தரும் அற்புதம் !!



 செயற்கை நுண்ணறிவின் ஒரு படைப்பு

எந்த ஒரு கேள்வியையோ அல்லது அது சம்பந்தமான ஏதாவது ஒரேஒரு வார்த்தையையோ தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேட்டாலும் அதற்கு திருக்குறளில் இருந்து விடை தரும் அற்புதம் !!


This is really brilliant - give it a try. Ask any question you have around how to manage your life, advice, suggestions - answers from Thirukkural along with the relevant Thirukural shows up. Then click on the individual Thirukural for explanation. Excellent use of AI. Ask me anything with Thirukural- 👇

https://www.thirukural.ai/

Thursday, 17 October 2024

தலைப்பு: நீர் மாசுபாட்டின் காரணங்களும், அதன் விளைவுகளும் பற்றிய 3 நிமிட பேச்சுப்போட்டி

 




தலைப்பு: நீர் மாசுபாட்டின் காரணங்களும், அதன் விளைவுகளும்
 
அன்பார்ந்தவர்களே,
 
நாம் எல்லோருமே அறிந்துள்ளபடி, நீர் என்பது வாழ்வின் அடிப்படை மூலதனம். ஆனால், இன்று உலகம் முழுவதும் நீர் மாசுபாடு கடுமையான பிரச்சனையாக மாறி வருகிறது. இதன் காரணங்களும், விளைவுகளும் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
 
காரணங்கள்:
 
1. கழிவுகள் கலப்பு:
   தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், மற்றும் மனித கழிவுகள் குளம், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் நேரடியாக கலப்பது, நீர் மாசுபாட்டிற்கு முக்கியமான காரணமாக உள்ளது.
 
2. கிராம மற்றும் நகர வியாபார கழிவுகள்:
   ஊராட்சிகளின் அபாயகரமான கழிவுகள் நன்கு சுத்தம் செய்யப்படாமல் நீர்நிலைகளில் கலக்கின்றன. இது சுற்றுப்புற நீர்நிலைகளை மட்டுமின்றி நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது.
 
3. பூச்சிக்கொல்லிகள்
   விவசாயத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், மண்ணின் வழியாக நீர்நிலைகளில் கரைந்துவிடுகின்றன. இந்த ரசாயனங்கள் நீரில் கரைந்துவிட்டால், அது வாழ்நிலை மற்றும் பயிர்களின் தரத்தை பாதிக்கும்.

 
விளைவுகள்: 
1. குடிநீர் பிரச்சனை:
   மாசுபட்ட நீரை குடிப்பதால், குடிநீர் உபரிவு குறைந்து, பல ஊர்களில் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். மாசுபட்ட நீர் உடல்நலக் கோளாறுகளுக்குத் தூண்டுகோல் ஆகிறது. கல்லீரல், விக்கல் நோய், மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம்.
 
2. விலங்குகள் மற்றும் பருவநிலை மாற்றம்:
   நீர் மாசுபாட்டால் பலவித ஜீவராசிகள் அழிந்து போகின்றன. நீரின் மீது ஆதாரப்படுத்தும் உயிரினங்கள் உயிர் வாழ முடியாமல், நம்முடைய மரபுவழி சுற்றுச்சூழல் சீர்கேடாகிறது. இது, கடல் உயிரினங்கள் மட்டுமின்றி நிலத்தில் வாழும் விலங்குகளையும் பாதிக்கிறது.
 
3. சூழலியல் மாற்றங்கள்:
   நீர்நிலைகள் மாசுபட்டால், மண்ணின் வளம் குறைகிறது, பசுமையான நிலங்கள் வறண்டவையாக மாறுகின்றன. இதனால் நீர்நிலைகளின் நிலைமை பாதிக்கப்படுவதுடன், மழைக்காலங்களில் தண்ணீர் சுருக்கம் ஏற்படுகிறது.
 


முடிவுரை:
நீர் மாசுபாட்டின் விளைவுகள் மிகக் கடுமையாகவும், நம்முடைய எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையிலும் உள்ளது. எனவே, இந்தப் பிரச்சனையை சரி செய்ய நாமெல்லோரும் அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.நன்றி.

Friday, 4 October 2024

வட்டார அளவிலான கலைத்திருவிழா-2024 போட்டிகளுக்கான கால அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்- பள்ளிக் கல்வித் துறை.

வட்டார அளவிலான கலைத்திருவிழா-2024 போட்டிகளுக்கான கால அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்- பள்ளிக் கல்வித் துறை.


வழிகாட்டு நெறிமுறைகள்👇👇👇

அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்றல் விளைவு/திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் சார்ந்து வழிகாட்டுதல் மற்றும் தேர்வு அட்டவணை.

அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்றல் விளைவு/திறன் வழி  மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் சார்ந்து வழிகாட்டுதல் மற்றும் தேர்வு அட்டவணை...





LO EXAM TIMETABLE




அறுபது வருடங்களுக்கு முன் காலண்டர்களில் ஓவியர் ரவி வர்மா வரைந்த ஓவியங்கள் நவீன செயற்கை நுண்ணறிவு நுட்பத்தால் உயிர்தெழும் ஆச்சர்யம்.



அறுபது வருடங்களுக்கு முன் காலண்டர்களில் ஓவியர் ரவி வர்மா வரைந்த ஓவியங்கள் நவீன செயற்கை நுண்ணறிவு நுட்பத்தால் உயிர்தெழும் ஆச்சர்யம்...



திருச்சி புத்தகத் திருவிழா- 2024-தெற்கு சித்தாம்பூர் பள்ளி கலை நிகழ்ச்சி- நாள்-30.09.2024

திருச்சி புத்தகத் திருவிழா- 2024



ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,

தெற்கு சித்தாம்பூர்.

கலை நிகழ்ச்சி- நாள்-30.09.2024





திருச்சி: திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில், ‘தமிழக வரலாற்றில் பெண்கள்’ என்றத் தலைப்பில் நிகழாண்டுக்கான ‘திருச்சி புத்தகத் திருவிழா’ மத்திய பேருந்து நிலையம் அருகே வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் இன்று மாலை தொடங்கியது. தொடர்ந்து அக்.6-ம் தேதி வரை 10 நாட்கள் இந்த புத்தகத் திருவிழா நடக்கிறது.

திருச்சி புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா நிகழ்ச்சி பள்ளி மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜலட்சுமி வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமை வகித்து பேசியது:

“திருச்சியில் புத்தகத்திருவிழா தொடங்கப்பட்டு 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். நிகழாண்டு புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் திருச்சியை சேர்ந்த முக்கிய ஆளுமைகள் பாராட்டு பெறுவார்கள். சிறார்களுக்கு தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடக்கும். புத்தகங்கள் பலரது வாழ்க்கையை மாற்றக்கூடிய விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது. என் வாழ்வில், ராபின் சர்மா எழுதிய ‘ஹூ வில் கிரை வென் யூ டை’ என்ற புத்தகம் பல மாற்றங்களை கொண்டு வந்தது. ‘நாம் இறக்கும்போது யார் நமக்காக அழுவார்கள்’ என புத்தகத் தலைப்பு விநோதமாக இருந்தாலும், புத்தகத்தின் கரு என்பது நம் வாழ்வியலோடொன்றி ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

வளர்ந்த நாடுகள் சைலண்ட் சொசைட்டி என்பதை நோக்கி பயணிக்கிறது. அடுத்தத் தலைமுறையினர் குனிந்த தலை நிமிராமல் போனையே பார்த்துக் கொண்டிருப்பர். பக்கத்தில் யார் இருந்தாலும் பேச மாட்டார்கள். தயக்கம் இருக்கும். சைலண்ட் சொசைட்டி மிகவும் அபாயகரமானது. உறவுப்பாலத்தை அமைக்கவோ, உணர்வுப்பூர்வமான ஆதரவையோ தர முடியாது. ஜப்பானில் இந்த நிலையை நோக்கி பயணித்துவிட்டது. இந்தியாவையும் அடுத்த சைலண்ட் சொசைட்டியாக மாற்ற விரும்பவில்லை. ஒரு மாணவன் மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை சொல்லிக் கொடுங்கள். எவ்வளவு தான் திறன்கள் இருந்தாலும், அடுத்தவர்களிடம் பேசத்தெரியாத மாணவன் ஒரு தலைமைப் பண்பையோ, நிர்வாகப் பொறுப்பையோ வகிக்க முடியாது.

அனைவரிடமும் பழக பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். வாழ்க்கை என்பது நமது நினைவுகள் தான் வாழ்க்கை. வயதான காலத்தில் நம் நினைவுகள் நமக்குச் சொல்லித் தரும். நாம் இறக்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் என பல விஷயங்கள் குறித்து ராபின் சர்மா எழுதிய அந்தப் புத்தகம் பேசும். அதுபோன்று இங்கு லட்சக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகத்தின் ஒரு பக்கத்தை திருப்பும்போது வாழ்க்கையில் ஒரு நாளை மறந்து அடுத்த பரிணாமத்தை அடைகிறீர்கள் என்று அர்த்தம். புத்தகம் வாசிப்பின் மூலம் தனி மனிதனின் பாத்திரத்தை நாம் கண்டறிய முடியும்’ இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து பேசியதாவது: “பள்ளி மாணவர்கள் காலாண்டு விடுமுறையை பயனுள்ள வகையில் இந்த புத்தகத்திருவிழாவில் செலவிட வேண்டும். நம் அறிவுப்பசியை தீர்த்துக்கொள்வதற்காக புத்தகங்களுக்கான ‘பஃபே சிஸ்டம்’ இது.

ஒவ்வொரு அரங்கையும் பார்த்து புத்தகங்களை தேர்ந்தெடுங்கள். வாசிப்பு பழக்கம் மிக முக்கியமானது. படிக்க படிக்க புது சிந்தனைகள் வரும். ஒவ்வொரு கருத்தையும் புதிதாக பார்க்கலாம். நம் வாழ்வின் தேவைகளுக்கு அடுத்தப்படியாக நல்ல புத்தகத்துக்கு நாம் முக்கியத்துவம் தரவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பாட சாலை அமைந்தால் நாட்டின் நிலை முன்னேறும் என்று அண்ணா தெரிவித்துள்ளார். வாசிக்கலாம் வாங்க என்று புத்தகம் சொல்கிறது. ‘வா’, ‘சிக்கலாம்’ என்று செல்போன் சொல்கிறது. செல்போன் பார்ப்பதை தவிர்த்து புத்தகத்தை அதிகம் வாசிக்க வேண்டும்.

‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் லைப்ரரி’ என்ற திட்டம் மூலம், மருத்துவமனையில், வயதானவர்களும் போன் செய்து புத்தகங்களை பெற முடியும். உலக அறிவை வளர்த்துக் கொள்ள இதுபோன்ற புத்தகத்திருவிழா நடத்தப்படுகிறது. புத்தக்தை காதலிக்கும் வகையில் ஒரு குழந்தையை கொண்டு செல்லவது எப்படியென்றால், குழந்தைகளுடன் அமர்ந்து ஒரு புத்தகத்தை 10 முதல் 15 நிமிடங்கள் வாசிக்கத் தொடங்கினால், அந்த குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் ஆர்வம் வந்துவிடும் என யுனிசெப் ஆய்வு கட்டுரை சொல்கிறது. எனவே குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை கொண்டு வாருங்கள்’ என்றார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னையிலிருந்து காணொலி மூலம் பேசும்போது, “தமிழக முதல்வர் வழிகாட்டுதல்படி இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் புத்தகத் திருவிழா சிறப்பாக தமிழகத்தில் நடக்கிறது. திருச்சியின் 3வது புத்தகத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒரு கலை நாளாக கொண்டாடப்படுவது பாராட்டுக்குரியது. கல்லூரி மாணவர்கள் பேசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

விழாவில், திருச்சியின் முக்கிய தமிழ் ஆர்வலர்களான ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர்கள் முனைவர்கள் ராஜகோபாலன், அந்தோணி குரூஸ், கல்வியாளர் சவுமா ராஜரத்தினம், டாக்டர் எம்.ஏ.அலீம் ஆகியோர் பாராட்டப்பட்டனர். மாவட்ட நூலர் சிவக்குமார், கவிஞர் நந்தலாலா, திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் வீ.கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு நாளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க்ள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை வழ்ங்கினார்கள்.

அதில் 30.09.2024 அன்று திருச்சி மாவட்டம்,முசிறி ஒன்றியம்,தெற்கு சித்தாம்பூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  மாணவர்கள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் தமிழக வரலாற்றில் பெண்கள் எனும் தலைப்பில் நடனமாடினர்.  


சங்க காலம் தொட்டே நம் பெண்கள் தங்களின் வலிமை, பொறுப்பு மற்றும் கல்விச் சிறப்பின் மூலம் அவைப் புலவர்கள், அரசியல் ஆலோசகர்கள், போர்க்குரிய பெண்கள், ஆட்சி அதிகாரம் மிகுந்த பெண்கள் என பல துறைகளிலும் தங்கள் தடம் பதித்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். அத்தகைய பெண்களின் வழித்தோன்றலாய் "மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும்" எனும் வாக்கை மெய்யாக்க போற்றுதலுக்குரிய கல்வி, வீரம் தீரம் என அனைத்தின் சிறப்பையும் தங்கள் நடனத்தாலும் நளினத்தாலும் நிலை நிறுத்தினார்கள்.

"பெண்ணின்றி அமையாது உலகு"-பாதுகாப்போம் பெணமையை.!!


மாணவச் செல்வங்களின் கிராமிய நடன நிகழ்வில் பங்கேற்று மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் அவர்கள் மற்றும் புலவர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் மற்றும் முசிறி மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) அவர்கள் மற்றும் முசிறி வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களும் மணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினர்.நிகழ்சிசியில் பல்வேறு அரசு அலுவலர்களும், பள்ளி தலைமையாசிரியர் (பொ) திரு.முருகன் மற்றும் பொறுப்பாசிரியர் திருமதி.சுமலதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கலை நிகழ்ச்சியின் YOUTUBE LINK👇👇👇:


POPULAR POSTS

8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide

MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...